Posts

Showing posts from December, 2019
Image
சாலையோரங்களில் மரக்கன்றுகளை வளர்த்து வரும் சிவகங்கை   எஸ் . ஐ . ! சிவகங்கை , டிச .25- சிவகங்கை சிறப்பு எஸ்ஐ ஒருவர், தனது ஓய்வு நேரத்தில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை 2013-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக சாலையோரங்களில் இருந்த பல ஆயிரம் பழமையான மரங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒரு மரக்கன்று கூட நடவு செய்யவில்லை. இதனால் கோடைக்காலங்களில் வாகனங்களில் செல்வோருக்கு வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து சிவகங்கை தாலுகா காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் எம்.ஜி.ராமச்சந்திரன் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நாட்டரசன்கோட்டை அருகே குளிர்ந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.மேலும் இவர் ஓய்வு நேரங்களில் மட்டுமே இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். பணிப்பளு நிறைந்த காவல் பணியில் மரக்கன்றுகளை நட்டு, அதை பாதுகாத்து வரும் சிறப்பு எஸ்.ஐயின் செயலை வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து எம்.ஜி.ராமச்சந்திரன் கூறியதாவது: சாலையோர

தேசிய விவசாயிகள் தினத்தில் பெரியகுளம் தென்கரையில் உதயமானது F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி!

Image
தேசிய விவசாயிகள் தினத்தில் பெரியகுளம் தென்கரையில் உதயமானது F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி! துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர், ஆவின் தலைவர் ஓ.ராஜா திறந்து வைத்தார்!! பெரியகுளம், டிச.24 - தேசிய விவசாயிகள் தினத்தன்று தேனிமாவட்டம் பெரியகுளம், தென்கரையில் மதுரை சத்யம் பயோ இயற்கை உரம் நிறுவனத்தின்   F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. மீனா டிரேடர்ஸின் உரிமையாளரும், பாரம்பரிய விவசாயியுமான லோகநாதன்,   F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின்   புதிய பிரான்சைஸி உரிமையை பெற்றுள்ளார். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், மதுரை மண்டல ஆவின் தலைவருமான ஓ.ராஜா கலந்து கொண்டு, தமது திருக்கரங்களால் குத்துவிளக்கேற்றி வைத்து, புதிய பிரான்சைஸியை திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் சத்யம் பயோ பொது மேலாளர் c.ஞானசேகரன், வணிகத்தலைவர் எம். சக்திவேல், மண்டல விற்பனை மேலாளர் வி.அருண்குமார், விற்பனை மேம்பாட்டு அலுவலர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உலகின

விவசாயம் செய்யும் ஐ.பி.எஸ். அதிகாரி!

Image
WE SALUTE TO FARMERS… விவசாயம் செய்யும் ஐ.பி.எஸ். அதிகாரி! இந்திய அளவில் உயர் பதவியான ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வாகி, பத்தாண்டுகளுக்குப் பின் அதைத் தூக்கி எறிந்து இளைஞர்களைத் திரட்டும் பணியில் இறங்கியுள்ளார் அண்ணாமலை ஐபிஎஸ். ஓய்வு நேரத்தில் விவசாயத்திலும் ஈடுபடுகிறார். இந்தியாவில் ஒவ்வொரு இளைஞனுக்கும் உயரிய லட்சியங்கள் இருக்கும். அதில் முக்கியமான ஒன்று சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஆட்சிப்பணி, காவல் பணிக்கு வருவது என்பதாகும். ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் நேரடியாக அதிகாரத்துடன் மக்கள் பணியை ஆற்றலாம் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். கஷ்டப்பட்டு ஆட்சிப் பணி, காவல் பணிக்கு வரும் நபர்கள் மக்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் உன்னதமாகப் பணியாற்றுபவர்கள் பலர். இப்படி வாழ்வின் உச்சத்துக்கு வந்த தமிழக இளைஞர்களில் ஒருவர் அண்ணாமலை. ஐபிஎஸ் பணியில் வென்று கர்நாடக கேடராக பல மாவட்டங்களில் எஸ்.பி.யாகப் பணியாற்றி, பெங்களூர் நகர துணை ஆணையராகப் பணியாற்றும்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது முடிவு பெங்களூரு தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. முதல்வர் குமாரசாமியுடன் மோதல், அதனால் ராஜ

வெங்காயத்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரனான விவசாயி!

Image
வெங்காயத்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரனான விவசாயி! பெங்களுரு, டிச.20 கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர், தற்போதைய விலை ஏற்றத்தால் பெருமளவில் பொருள் ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன என்ற விவசாயி, 5 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்துள்ளார். அண்மையில் அவர் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்து வந்தார். தற்போதைய விலை ஏற்றத்தால் அவர் பெருமளவில் பணம் சம்பாதித்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 200க்கு விற்பனையாகி வரும் நிலையில், அவர் மொத்த விலையில் எவ்வளவு ரூபாய்க்கு விற்றார் என்பது தெரியவில்லை . ஆனாலும் தற்போதைய சூழலில், அவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்திருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வியாபாரி 2 கோடி ரூபாய் வரை பணம் சம்பாதித்திருக்க வாய்ப்பு இருப்பதாக சக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சத்யம் தொழிற் குழுமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை குழுவினர்!

Image
சத்யம் தொழிற் குழுமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை குழுவினர்!                 இயற்கை உரங்கள் உற்பத்தியை பார்வையிட்டு,                       நவீன தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்!! மதுரை, டிச.16 - மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் அங்கமான மேலமாத்தூர் சத்யம் கிஸான் கேர் தொழிற்சாலையை   கோவை வேளாண் பல்கலைகழகத்தின் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நவீன தொழில் நுட்பத்தில் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தனர். மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் அங்கமான சத்யம் கிஸான்கேர் நிறுவனம் ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்களை உற்பத்தி செய்து நாடு முழுக்க விற்பனை செய்து வருவதுடன், இயற்கை விவசாயத்துக்கு மாறி வரும் விவசாய பெருமக்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும், பாராட்டையும் குவித்து வருகிறது. ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற வகையில், அதன் வளர்ச்சியையும், உற்பத்தியையும் இருமடங்கு பெருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, ஆழ்கடல் பகுதியில் இருந்து சேகரிக்கப்படுகின்ற கடல்பாசியிலிருந்து அதன் மூலக்கூறுகளை சாறாக பிரித்தெடுத்து, முழுக்க, முழுக்க இயற்கை மூலப்பொருட்களுடன் பயிர

பச்சை மனிதனின் வித்தியாசமான மனுதாக்கல்!

Image
இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் பச்சை மனிதனின் வித்தியாசமான மனுதாக்கல்! அரியலூர், டிச.13- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். இவர் அகில இந்திய மக்கள் சேவை இயக்க  விவசாய பிரிவு மாநில தலைவராக உள்ளார். பச்சை மனிதன் என்று அழைக்கப்படும் இவர் எப்போதும் பச்சை நிற வேஷ்டி சட்டை மற்றும் பச்சை நிற தலைப்பாகை அணிந்து இருப்பார். நம்மாழ்வார் கொள்கையை பின்பற்றி மாநிலம் முழுவதும் பசுமையை காக்கவும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டியும், இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று நூதன முறையில் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறார்.  அதேபோன்று நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பு தாக்கல் செய்தார். அப்போது அவர், கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவேன் என்ற உறுதி மொழியுடன் மரக்கன்றுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த போலீசார் மரக்கன்றை உள்ளே எடுத்து செல்

ஓர் பொறியாளன் விவசாயி ஆன கதை! ”சொகுசானா வாழ்க்கை, உயர்ந்த சம்பளம் தராத நிம்மதி, விவசாயம் தருகிறது” - கடலூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார்.

Image
ஓர் பொறியாளன் விவசாயி ஆன கதை! ”சொகுசானா வாழ்க்கை, உயர்ந்த சம்பளம் தராத நிம்மதி, விவசாயம் தருகிறது” - கடலூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார்.  தற்பொழுது விவசாயத்தின் தேவையையும் அதனுடைய நிலைமையையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்ததே. விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நாம் தற்பொழுது இயற்கை விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு பெற்று வருகிறோம். அதனால் ஆர்கானிக் பொருட்கள் மீது ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது என்றுக் கூட கூறலாம்.  மேலோட்டமாக இயற்கை விவசாயம் என்று நாம் அதிகம் பேச, இங்கு ஒருவர் அதன் முக்கியத்துவத்தை அறிந்து தன் வசதியான வாழ்கையை துறந்து இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலிருக்கும் கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் பொறியாளர் சிவக்குமார். சொகுசானா வாழ்க்கை, சிங்கப்பூரில் 2 லட்சத்திற்கு மேலான சம்பளம் என இருந்த சிவக்குமார் தற்பொழுது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். சேலம் கல்லூரியில் 2005 பொறியியல் பட்டபடிப்பை முடித்த சிவக்குமார், ஒரு வருடம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணிபுரிந்தார். அதன் பின் ஒரு சென்னை பொறியியல் கல்ல

வயல்பட்டி, பூதிப்புரம், கோடங்கிபட்டி பகுதிகளில் சக்தி இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி! ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!!

Image
வயல்பட்டி, பூதிப்புரம், கோடங்கிபட்டி பகுதிகளில் சக்தி இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி! ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!! தேனி, டிச.07 - தேனி சுற்று வட்டார பகுதிகளில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரத்தின் சார்பாக இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வுக்கான   விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வயல்பட்டி, பூதிப்புரம், கோடங்கிபட்டி   ஆகிய கிராமங்களில் இருநாட்களாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சத்யம் பயோ நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர் தியாகராஜன் மற்றும் கள அலுவலர்கள், விற்பனை அலுவலர்கள் கலந்து கொண்டு சக்தி இயற்கை உரம் பயன்படுத்துவதின் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள், குறைந்த முதலீட்டில் இருமடங்கு மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறினர். இந்நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதி விவசாயிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார விவசாயிகளும் ஆர்வத்துடன் பெருமளவில் கலந்து கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சக்தி இயற்கை உரத்தின் ஸ்டாலையும் பார்வையிட்டு, உரங்களை ஆர்வ

விவசாயம் படித்த நம்மூர் பெண்ணுக்கு ரூ. 1 கோடி சம்பளத்தில் வேலை! அமெரிக்க நிறுவனம் அள்ளிச்சென்றது!!

Image
விவசாயம் படித்த நம்மூர் பெண்ணுக்கு ரூ . 1 கோடி சம்பளத்தில் வேலை ! குர்தாஸ்பூர், டிச.07- ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை இந்திய பெண்ணுக்கு கிடைத்துள்ளது. வேலை கனடாவில். வேளாண்மையில் முதுகலை இறுதி ஆண்டுப் படிப்பை முடிக்கப் போகும் கவிதா ஃபமனுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.  பயிர்களுக்கு உகந்த பூச்சி கொல்லிகளைத் தயாரிப்பதில் 118 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் முன்னணி நிறுவனமான மான்சான்ட்டோவின் கனடா நிறுவனத்தில் பூச்சி கொல்லி மருந்துகள் தயாரிப்பு மேலாளராக கவிதா ஃபமன் கடந்த மாதம் பொறுப்பேற்றுள்ளார்.  கவிதாவின் கல்வித் தகுதி, அறிவுத் திறன் அடிப்படையில் பல சுற்று வடிகட்டலுக்குப் பிறகே தேர்வு பெற்றுள்ளார். "வேளாண் படிப்பில் ஆராய்ச்சி முனைப்பிருந்தால் கணினி துறையில் அதிக சம்பளம் கிடைப்பது போல் வேளாண்மை துறையிலும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்'' என்கிறார் கவிதா ஃபமன்.  பஞ்சாப் குர்தாஸ்பூரில் இருக்கும் லவ்லி வேளாண் பல்கலைக் கழகத்தில் கவிதா ஃபமன் முதுகலை படிப்பு படித்து வந்தார்.

இயற்கை விவசாயத்தில் அசத்தும் இளைஞர்!

Image
மாதம் ரூ. 4 லட்சம் சம்பளத்தில் வெளிநாட்டு வேலையை உதறி விட்டு இயற்கை விவசாயத்தில் அசத்தும் இளைஞர்! தென்காசி, டிச.05 - வெளிநாட்டில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதித்தவர் தாயகம் திரும்பியதும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி. இடுபொருட்கள் செலவு, ஆள் பற்றாக்குறை, இயற்கை பேரிடர்களால் பாதிப்பு போன்றவற்றால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். இதனால் விவசாய தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு பலர் சென்றுவிட்டனர். இளம் தலைமுறையினரும் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், வெளிநாட்டில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதித்தவர், தாயகம் திரும்பியதும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். தென்காசி மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் முகமது யாசின் (45). இவர், வடகரையில் உள்ள தனது விவசாய நிலத்தில் 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் மூலம் நெல் சாகுபடி செய்துள்ளார். இதுகுறித்து முகமது யாசின் கூறியதாவது: நான் டிஎம்இ படித்துள்ளேன். சவுதி அரேபியாவில் உள்ள இரும்பு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை ப

இளம்பெண்! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் காளைகளை வளர்க்கிறார்!!

Image
படித்தது ஆங்கில இலக்கியம்... பார்ப்பது வயக்காட்டு வேலை விவசாயத்தில் அசத்துகிறார் மதுரை பட்டதாரி இளம்பெண்! அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டுக்கும் காளைகளை வளர்க்கிறார்!! மதுரை, டிச.02 - மதுரையில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு பெற்றோருடன் விவசாயம் பார்க்கும் இளம் பெண், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக நான்கு காளைகளை தயார்படுத்தி வருகிறார். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மதுரையைச் சுற்றி உள்ள கிராமங் களில் காளைகளை அதன் உரிமை யாளர்கள் தயார்படுத்தி வருகி றார்கள். பொதுவாக ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. காளைகளை அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அவர்களைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கும் காளைகளின் பெருமைகளையும் பறைசாற்றும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்டைப் பார்க்க வரும் பார்வையாளர்களும், பெரும் பாலும் ஆண்களாகவே உள்ளனர். அதை மாற்றிக்காட்டும் விதமாக இந்த ஆண்டு மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கல்லம்பட்டி சிற்றூரில், இளம் பெண் கனிமொழி வரும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க