தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா! மதுரை சத்யம் தொழில்குழுமம் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!
தேனி, பிப்.17 - தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், அய்யம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஏழை காத்தம்மன், ஸ்ரீவல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், காளையர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தேனிமாவட்ட கலெக்டர் திருமதி பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மதுரை சத்யம் தொழில்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு வாடிவாசல் பகுதியில் அய்யம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தனலட்சும் அண்ணாதுரை, அய்யம்பட்டி கிராம கமிட்டி தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் சிறப்பு மரியாதை அளித்தனர். வாடிவாசலில் இருந்து துள்ளிக்...