Posts

Showing posts from October, 2019

கண்கவரும் 16 வண்ணப்படங்கள்... சுவையான வராலாற்றுத்தகவல்களுடன் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தல வரலாறு!

Image
கண்கவரும் 16 வண்ணப்படங்கள்... சுவையான  வரலாற்றுத்தகவல்களுடன் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்கு ன் றம் முருகன் கோயில் தல வரலாறு! மதுரை சத்யம் பயோ நிறுவன நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் காணிக்கையாக வழங்கினார்!! மதுரை, அக்.21 - தமிழ்க்கடவுளான அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் தலவரலாறு மதுரை சத்யம் பயோ நிறுவனத்தால் திருத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியிடப்பட்டு திருக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த நூலினை திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் மணிமாறன், புகழேந்தி, கார்த்திக், மணிகண்டன் பட்டர் உள்ளிட்டோரிடம் சத்யம் பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் வழங்கினார். திருக்கோயில் சார்பில் சத்யம் பயோ நிறுவனருக்கு முருகப்பெருமானின் அருள்பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தலவரலாறு நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்... இத்தல வரலாறு புத்தகம் மொத்தம் 88 பக்கங்களை உள்ளடக்கியது. இந்த புத்தகத்தில் அருள

மதுரை பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நல உதவிகள்!

Image
மதுரை பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நல உதவிகள் சத்யம் பயோ நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் வழங்கினர்!! மதுரை, அக்.19 - மதுரை பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நல உதவிகள் வழங்கும் விழா மதுரை புட்டுத்தோப்பு மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.  பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல்  அறக்கட்டளையின் தலைவர் எம்.குருசாமி தலைமை வகித்தார். நிலா சேவை மைய அறக்கட்டளையின் கவிக்குயில் இரா.கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் ஆ.மணிவண்ணன், மதுரை சத்யம் பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், அரிசி, இனிப்பு உள்ளிட்ட தீபாவளி நல உதவிகளை வழங்கினர். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 25 மாணவர்களுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். விழாவில் மதுரை

பொள்ளாச்சி ‘அக்ரி ஷோ’வில் சத்யம் பயோ இயற்கை உர கண்காட்சி!

Image
பொள்ளாச்சி ‘அக்ரி ஷோ’வில் சத்யம் பயோ இயற்கை உர கண்காட்சி! பொள்ளாச்சி, அக்.11 - பொள்ளாச்சி&பாலக்காடு மெயின் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 11, 12, 13 ஆகிய நாட்களில் அக்ரி ஷோ நடந்து வருகிறது. இக்கண்காட்சியின் 8ஏ அரங்கில் மதுரை சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. கண்காட்சிக்கு வரும் விவசாயபெருமக்கள் சக்தி இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்தும்,  பயன்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். சக்தி இயற்கை உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி, இருமடங்கு லாபத்துடன் பயன் அடைந்து வரும் விவசாயப் பெருமக்கள், புதிய தயாரிப்புகள் குறித்து ஆர்வமாக விசாரித்தனர். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்து தேவையான உரங்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களிலும் நடக்கும் இந்த வேளாண் கண்காட்சி பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Image
பசுமை நிறைந்த வயல்வெளிகள்... பூத்துக்குலுங்கும் பசுஞ்சோலைக்கு மத்தியில் 40 ஏக்கர் புதிய வளாகத்தில் செயல்பட தொடங்கியது சத்யம் பயோவின் மதுரை வேளாண்மை அறிவியல் கல்லூரி! சிவானந்தா சேவாஸ்ரமம் சுவாமிகள் ஸ்வரூபானந்தா அருளாசி!! மதுரை, அக்.10 - பசுமை நிறைந்த வயல்வெளிகள், பூத்துக்குலுங்குகின்ற பசுஞ்சோலைகளுக்கு மத்தியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய வளாகத்தில் செயல்பட தொடங்கியது சத்யம் பயோவின் ஒரு அங்கமான மதுரை வேளாண்மை அறிவியல் கல்லூரி. உலகத்தரம் வாய்ந்த இயற்கை உரம் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மதுரை சத்யம் பயோ நிறுவனம் சார்ந்த சத்யம் பயோ குழுமத்தின் ஒரு அங்கமாக திகழ்வது மதுரை வேளாண்மை அறிவியல் கல்லூரி. ( Institute of Agriculture Research Institute ).  இக்கல்லூரி ஏற்கனவே செயல்பட்டு வந்த திருநகர் 5 - வது ஸ்டாப், சீனிவாசாநகர் 9 - வது தெரு வளாகத்திலிருந்து, தற்போது 40   ஏக்கர் பரப்பளவில் பசுமை நிறைந்த வயல்வெளிகளும், பசுமையான சோலைகளுமாக பூத்துக்குலுங்குகின்ற மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில், ஆஸ்டின்பட்டி மெயின் ரோட்டில், 21/7 என

உயிர்கொடுக்கும் சத்யம் பயோவின் ‘யூஸ் இட்’

Image
வறட்சியை தாக்குப்பிடித்து தென்னைக்கு உயிர்கொடுக்கும் சத்யம் பயோவின் ‘யூஸ் இட்’ பொள்ளாச்சி விவசாயிகள் வாங்கி பயன்பெற ஆர்வம்!! பொள்ளாச்சி, அக்.09 - வறட்சியைத் தாக்குப்பிடித்து பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை தொய்வின்றி வழங்கும் சத்யம் பயோ நிறுவனத்தின் புதுமையான தயாரிப்பான ‘யூஸ் இட்’ பயன் குறித்து பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் விசாரித்தனர். பொள்ளாச்சி பகுதியில் தேவனூர் புதூர், ஆனைமலை மெயின்ரோட்டில் சத்யம் பயோ நிறுவனத்தின் F 3 ஆர்கானிக் மார்க்கெட் ஆர்.பி.ஏஜென்சியால் நடத்தப்படுகிறது. இம் மையத்தின் அருகில் சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள், உணவுப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இப்பகுதி தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெறும் பகுதி என்பதால், நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகள் ஆர்வமுடன் திரண்டு வந்து சக்தி இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தனர். பெரும்பாலான விவசாயிகள் தென்னையைப் பாதிக்கின்ற பூச்சித்தாக்குதல் குறித்தும், வறட்சியான காலங்களில் தென்னைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பட்டுப்போவது குறித்து

இயற்கை உரங்களால் விவசாயத்துக்கு உயிரூட்டும் இளைஞர்!

Image
இயற்கை உரங்களால் விவசாயத்துக்கு உயிரூட்டும் இளைஞர் ! இந்த உலகின் ஆதாரம் உணவு . உணவில்லையேல் உயிரில்லை . ஆனால் , இன்று அந்த உணவே கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாகி , நம் உயிரை எடுக்கத் தொடங்கியிருக்கிறது . இதற்கெல்லாம் அடிப்படை , இயற்கை     விவசாயத்தை மறந்து , ரசாயனம் மிகுந்த உரங்களுடன் விவசாயத்தை மேற்கொண்டதுதான் என்கின்றனர் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் . ரசாயனங்களால் இந்த மண் மலடாகிக் கொண்டிருக்கும் சூழலில் ,       இனியாவது இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு , நம்மையும் , எதிர்கால சந்ததிகளையும்   பாதுகாப்போமா என்பதே நம்முன் நிற்கும் மில்லியன்    டாலர் கேள்வி . இந்த கேள்விகளுக்கு எல்லாம் நிச்சயம் விடை உண்டு என்கிறார் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இயற்கை உரங்கள் தயாரிப்பு நிறுவனமான சத்யம் பயோ குழுமத்தின் தலைவரான வி . செந்தில்குமார் . 2004& ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இவரது சத்யம் பயோ இயற்கை உரம் நிறுவனம் கடல் வழித்தாவரங்களில் இருந்து கிடைக்கின்ற மூலப்பொருட்களில் இருந்து சக்தி இயற்கை உரங்கள் தய