2020 புத்தாண்டை முன்னிட்டு வேளாண்மைத்துறை அமைச்சருடன் சத்யம் குழுமம் நிறுவனர் சந்திப்பு! பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!! சென்னை, ஜன.03- 2020 புத்தாண்டு ஜனவரி முதல்தேதியன்று சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.துரைக்கண்ணு அவர்களை மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் நிறுவனரும், சத்யம் பயோ நிறுவனத்தின் அதிபருமான திரு. வி.செந்தில்குமார் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சத்யம்பயோ நிறுவனர் திரு.வி.செந்தில்குமார் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மரியாதை நிமித்தமான இச்சந்திப்பின் போது, அமைச்சர் அவர்களும் தமது உளப்பூர்வமான வாழ்த்துக்களை சத்யம் தொழிற்குழுமத்தின் நிறுவனருக்கு தெரிவித்துக்கொண்டார்.