கண்கவரும் 16 வண்ணப்படங்கள்... சுவையான வராலாற்றுத்தகவல்களுடன் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தல வரலாறு!


கண்கவரும் 16 வண்ணப்படங்கள்...
சுவையான  வரலாற்றுத்தகவல்களுடன்
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தல வரலாறு!

மதுரை சத்யம் பயோ நிறுவன நிர்வாக இயக்குனர்
வி.செந்தில்குமார் காணிக்கையாக வழங்கினார்!!




மதுரை, அக்.21-
தமிழ்க்கடவுளான அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் தலவரலாறு மதுரை சத்யம் பயோ நிறுவனத்தால் திருத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியிடப்பட்டு திருக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

இந்த நூலினை திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் மணிமாறன், புகழேந்தி, கார்த்திக், மணிகண்டன் பட்டர் உள்ளிட்டோரிடம் சத்யம் பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் வழங்கினார்.திருக்கோயில் சார்பில் சத்யம் பயோ நிறுவனருக்கு முருகப்பெருமானின் அருள்பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

தலவரலாறு நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்...
இத்தல வரலாறு புத்தகம் மொத்தம் 88 பக்கங்களை உள்ளடக்கியது. இந்த புத்தகத்தில் அருள்மிகு முருகப்பெருமானின் 16 வண்ணமிகு புகைப்படங்கள் கண்கவரும்  வகையில் இடம் பெற்றுள்ளது. இத்துடன் கடவுள் வாழ்த்து, பாண்டியநாடு சிறப்பு, மதுரையின் மாண்பு, திருப்பரங்குன்றம் தலச்சிறப்பு, திருப்பரங்குன்றம் கோயில் சிறப்பு, கோயில் அமைப்பு, மூர்த்தியின் சிறப்பு,  தீர்த்தத்தின் சிறப்பு, வழிபாடு செய்து பயன்பெற்றோர் சிறப்பு, ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், சரித்திர வரலாறு, புராணக்கதைகள், தல இலக்கியங்கள், பூஜை மற்றும் திருவிழாக்கள் விபரம், திருக்கோயில் நிர்வாகம், பக்தர்களின் வசதிகள், நலத்திட்டங்கள், தேவாரம், திருப்புகழ் பதிகங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கோயில் பற்றிய சுவையான வரலாற்றுத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தலவரலாறு புத்தகம் திருப்பரங்குன்றம் திருக்கோயிலின் புத்தக விற்பனை நிலையத்தில் கிடைக்கும். இத்தல வரலாறு புத்தகத்தின் விலை ரூ.50/& ஆகும்.

பக்தர்கள் அனைவரும் வாங்கி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்நூல். உங்களின் பார்வைக்காக நூலில் இடம் பெற்றுள்ள அழகு முருகனின் அருட்கோலத்தை வண்ணப்படங்களாக இங்கே வெளியிடுவதில் சத்யம் பயோ குழுமம் பெருமிதம் கொள்கிறது...
















Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!