சக்தி இயற்கை உரங்களை பயன்படுத்தி அமோக விளைச்சலை அள்ளி குவிக்க ஆர்வம்!!
வருணபகவான் கருணையால் மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் நடவுப்பணியை துவங்கிய விவசாயிகள் ! சக்தி இயற்கை உரங்களை பயன்படுத்தி அமோக விளைச்சலை அள்ளி குவிக்க ஆர்வம் !! மதுரை , அக் .02& மதுரை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை ஆர்வமுடன் துவக்கி உள்ளனர் . தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது . பரவலாக பெய்து வரும் பருவமழையால் , ஏற்கனவே குடிமராமத்து மூலம் தூர்வாரப்பட்ட ஏரிகளிலும் , குளங்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது . அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது . இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் வழக்கமான நடவுப்பணிகளை துவக்கி உள்ளனர் . மதுரை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர் . இதற்காக அனைத்து நிலங்களையும் உழுது தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன . இப்பகுதியில் பெரும்பாலும் ஒரு போக பாசனம் மேற்கொள்ளப்படுகிறது . இப்பகுதி விவசாயிகளிடையே மதுரை சத்யம்பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்களி...