விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தையில்
விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற
சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!



மதுரை, செப்.25-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த கால்நடை சந்தையில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் ,  சக்தி இயற்கை  கால்நடை தீவனம் விவசாயிகளின் பெரும் வரவேற்பை பெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று காய்கறி, மலர், கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி இயற்கை தீவனம் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.
இச்சந்தையில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், மலர் வணிகர்களும், கால்நடை வளர்ப்போரும் கலந்து கொண்டனர். கால்நடை சந்தையில் நாட்டு மாடுகள், பொலி காளைகள், காங்கேயம் காளைகள், நாட்டின பசுக்கள், ஜெர்ஸி மாடுகள் உள்பட அனைத்து ரக காளைகளும் பங்கேற்றன. 


இச்சந்தையில் பங்கேற்ற விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி கால்நடை தீவனத்தின் பயன்களை ஆர்வமுடன் கேட்டு, வாங்கிச்சென்றனர்.

சத்யம் பயோவின் சக்தி இயற்கை உரங்கள் பற்றி...
சத்யம் நிறுவனமானது திரு.வி.செந்தில்குமார் அவர்களால் கடந்த 2004-ம் ஆண்டில் மதுரையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நூறு சதவீத இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனமாகும். சக்தி இயற்கை உரம் என்ற பெயரில் இதன் தயாரிப்புகள் தமிழகம் முழுவதும் விவசாய பெருமக்களின் நன்மதிப்பு பெற்றவை.

சர்காஸம் என்னும் கடல்பாசியின் மூலக்கூறுகளை பிரித்தெடுத்து, அதனை பதப்படுத்தி, நொதிக்க வைத்து, நன்கு செறிவூட்டப்பட்டு அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, அதிசிறந்த வேளாண் தொழில் நுட்ப நிபுணர்களின் ஆலோசனைப்படி குருணை வடிவிலும், ஜெல்லி வடிவிலும், ஜெல் வடிவிலும், லிக்யூட் வடிவிலும், மாத்திரை வடிவிலும் நூறுசதவீத இயற்கை உரங்களாக தயாரித்து வழங்கப்படுகின்றன.


சக்தி கோல்டு ஜெல், எர்த்பவர், சர்கா ஜெல்லி, ஜியோ கேர், கிராப் டாப், ப்ளாக் கார்பன், ரெட்கிங், சம்பூர்ணா, அக்ஷயா, சாயில் கோல்டு, சாயில் என்ரிச்சர், தயாநியூட்ரி, பனானாப்ளஸ், கோகோபவர், குரோவெஜ், சில்வர்ஜெல், அமோஹா, அஸ்கோ-கிங் ஜி, என்பீகே, MPSA -90, யூஸ் இட் என்ற பெயர்களில் 22-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளாக வெளிவரும் சக்தி இயற்கை உரங்களை ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற வகையில் அடி உரமாகவும், மேல் உரமாகவும், இலைவழி தெளிப்பானவும், சொட்டு நீர்ப்பாசனமாகவும் வழங்கலாம்.


உலகிலேயே முதல்முறையாக பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின்படி, சத்யம் பயோவின் முற்றிலும் புதுமையான கண்டுபிடிப்பாக ஜெல்லி வடிவில் தயாரிக்கப்பட்ட கரிம உரம்தான் சக்தி சர்கா ஜெல்லி. மண்வளத்துக்கும், பயிர்களின் அதிக மகசூலுக்கும் ஏற்ற வகையில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களுடன் தயாரிக்கப்பட்ட, சொட்டு நீர் பாசனத்துக்கு ஏற்ற உரம் இது.

இதே போல இன்றைய கால சூழலுக்கு ஏற்ற வகையில், கடும் வறட்சியால் விவசாயிகள் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்னைகளுக்குத் தீர்வாக, சத்யம் பயோவின் சக்தி யூஸ் இட் திகழ்கிறது. இது தண்ணீரை தன்னகத்தே உறிஞ்சி வைத்துக் கொள்ளக்கூடிய பாலிமர் ஜெல்லி ஆகும். சக்தி யூஸ் இட் தன் எடையிலிருந்து 400 DM தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டது. மண்ணுக்குள் ஜெல்லி வடிவில் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளும் யூஸ் இட், வறட்சியான காலங்களில் பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை, தான் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் ஊட்டச்சத்துக்களுடன் கலந்து வழங்குகிறது. 

இதன் மூலம் எல்லா காலங்களிலும் பயிர்களுக்குத் தேவையான தண்ணீருக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் விவசாய பெருமக்களின் பெருமளவிலான பாரம் குறைந்து விடுகிறது என்பதால் சத்யம் பயோவின் புதுமையான கண்டுபிடிப்புகளில் யூஸ்-இட்-ம் ஒன்றாக கருதப்படுகிறது.

சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள், சக்தி கால்நடை தீவனங்கள், சக்தி இயற்கை உணவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட F3 ஆர்கானிக் மார்க்கெட் தமிழகம் முழுக்க செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் வாயிலாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள், இயற்கை உணவுகளை வாங்கி பயன்பெறலாம்.

இலவச இயற்கை உர பயன்பாடு ஆலோசனைக்கு... 1800 425 8055
F3 ஆர்கானிக் மார்க்கெட் பிரான்சைஸி தொடர்புக்கு 75508 75508
--------------------



Comments

  1. இரு நூறு ஆண்டுகளாய்
    இரசாயன உரங்களிடம்
    அடிமைப்பட்டு கிடந்தோம்
    எதிர்கால சந்ததியை காக்க
    இக்கணமே
    இயற்கை உரங்களுக்கு மாறுவோம்...
    தொடரட்டும் சத்யத்தின் பசுமைப்பணி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!