வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம்.

வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம்.



சீனித் துளசி சாகுபடி!
லகத்தில் மக்கள் தொகை பெருகுவதைப் போல நோய்களும் பெருகிக் கொண்டே உள்ளன. இவற்றுக்கான தீர்வுக்காக ஆங்கில மருந்து மாத்திரைகளைச் சாப்பிடும் போது பக்க விளைவுகள் உண்டாகின்றன. அதனால், மக்களின் பார்வை இப்போது மூலிகை மருத்துவத்தின் பக்கம் திரும்பியுள்ளது. மூலிகைகள் பட்டியலில் முக்கியமானது துளசி. அந்த இனத்தைச் சார்ந்தது இனிப்புச் சுவையுள்ள சீனித் துளசி. இதை ஆங்கிலத்தில் ஸ்டீவியா ரியோடியானா என அழைப்பார்கள்.

சீனித் துளசியின் தாயகம் தென்னமெரிக்கா. இது பராகுவேயில் மிகுதியாக உள்ளது. சீனித் துளசி இலையிலுள்ள ஸ்டீவியோசடு 3-10x, ரெபடையோசடு 13x ஆகிய வேதிப் பொருள்கள் தான் இதன் இனிப்புக்குக் காரணம். ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனித் துளசி கூடுதலாகப் பயிராகிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் ஏற்றுமதியில் சீனம் முதலிடம் வகிக்கிறது.சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும். கார அமிலத் தன்மை 6-7க்குள்ளும், வெப்பநிலை 40 டிகிரி செல்சியசும் இருக்க வேண்டும்.

சீனித் துளசி சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும். ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தையும், 100:45:45 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளையும் அடியுரமாக இட வேண்டும். அரையடி இடைவெளியில் நட வேண்டும். வாட்டமின்றிப் பாசனம் செய்ய வேண்டும். சீனித் துளசியில் நமக்கு மிகவும் தேவை இலைகள் மட்டுமே. எனவே, பூக்கும் போது அவற்றைக் கிள்ளி விட்டால் நன்கு செழித்து வளரும். 3-5 ஆண்டுகள் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு ஓராண்டில் 3,000 கிலோ காய்ந்த இலைகள் கிடைக்கும். இதனால் கிடைக்கும் வருமானம் ஒரு இலட்ச ரூபாயாகும்.


20 கிராம் சீனித் துளசி இலைகள் 50 கிராம் நாட்டுச் சர்க்கரைக்குச் சமம். கரும்பை விட 30 மடங்கு இனிப்புச் சுவையுள்ளது. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துகளும் உள்ளன. எனவே, டீ, காபி, பழச்சாறு, ரொட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதிலாக இந்த இலைகளைச் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் இதைப் பயன்படுத்தலாம். சீனித் துளசிச் செடியை வீட்டில் வளர்த்தால் சர்க்கரை தேவைப்படாது. இந்த இலைகளை மென்றால் 5-7 நிமிடம் வரையில் இனிப்புச் சுவை நாவில் அப்படியே இருக்கும்.

நூறு கிராம் சீனித் துளசி இலைகளில், பாலிபீனால் 4.2 கி., ஸ்டீவீயோசைடு 11.3 கி., நீர் 7.7 கி., புரதம் 12.0 கி., கொழுப்பு 2.7 கி., சாம்பல் 8.4 மி.கி., சோடியம் 32.7 மி.கி., பொட்டாசியம் 839 மி.கி., இரும்பு 31.1 மி.கி., கால்சியம் 722 மி.கி. உள்ளன.

இரத்தழுத்த நோய்க்கு அருமருந்தாக உள்ளது. தினமும் காலையில் இரண்டு இலைகளைச் சாப்பிட்டால் உடல் கனம் குறையும். எல்லாருக்கும் ஏற்றது சீனித் துளசி. எனவே, துளசிச் செடியைப் புனிதமாக வீட்டில் வளர்ப்பதைப் போல, சீனித் துளசிச் செடிகளை வளர்த்து வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம்.

நன்றி பச்சை பூமி :

மேலும் இயற்கை விவசாய ஆலோசனைக்கு அழையுங்கள் 

75508 75508






Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!